எண்ணங்கள்

Wednesday, August 09, 2006

பாடல் டெடிகேஷன் கூத்து

வர்ணணையாளர்/வர்ணணையாளினி : ஹலோ, வணக்கம் சொல்லுங்க, உங்க பெயர் என்ன.?

நேயர் : நான் பேட்டையில இருந்து <அவர் பெயரை சொல்லி> பேசுறேங்க.

வ/வ : அப்படியா...ஹா....ஹா.... (சிரிப்பு...) சொல்லுங்க, நீங்க என்ன பண்றீங்க.?

நேயர் : நான் உங்க கிட்ட ஃபோன்ல பேசிட்டு இருக்கேன்... (பெரிய ஜோக் சொல்லிவிட்ட
நினைப்பில் இவர் ஒரு முறை ஹி,...ஹி என்று சிரிக்க... உடனே சிரித்து வைக்க வேண்டுமே என்று உடனே வ/வ வும் ஹ்ம்..ஹ்ம்... என்று கஷ்டப்பட்டு சிரித்து வைப்பார்.)

வ/வ : இல்ல, நீங்க என்ன பண்றீங்க, படிக்கிறீங்களா... வேலை பாக்குறீங்களா..

நேயர் : நான் வேலை பாக்குறேன், இங்க பக்கத்துல, எலட்ரிக் கடையிலதான் வேலை பாக்குறேன்.

வ/வ : வேலையெல்லாம் எப்படி போகுது.

நேயர் : ம்ம்... நல்லா போகுதுங்க.

வ/வ : சரி உங்களுக்கு எந்த பாடல் வேணும்.

நேயர் : எனக்கு வசூல்ராஜா படத்துல இருந்து சீனா, தானா பாட்டு போடுங்க... இத

வ/வ : நீங்க கேட்ட பாடல் வந்துகிட்டே இருக்கு... கேட்டு என்ஜாய் பண்ணுங்க.

நேயர் : மேடம்... மேடம் ஒரு நிமுசம்.

வ/வ : ம்ம்.. சொல்லுங்க.

நேயர் : இந்த பாட்ட நான் டெடிகேசன் பண்றேன்.

வ/வ : யாருக்காக....

நேயர் : இது என் வொய்ஃப், என் குழந்தைங்க அப்புறம் அம்மா, அப்பா வுக்கு...

வ/வ : ரொம்ப நன்றி பாடல் வந்துகிட்டே இருக்கு...

இது நான் சமீபத்தில் ஒரு F.M ல் கேட்ட உரையாடல். இந்த உரையாடலை படித்தவுடன் இந்த கட்டுரையின் தலைப்பின் கடைசியில் ஏன் கூத்து என்று வைத்தேன் என்று உங்களுக்கு விளங்கியிருக்கும்.

என்னங்கயா இது கொடுமையா இருக்கு, சீனா, தானா பாட்டை யாரோ எழுதி, யாரோ மியூசிக் போட்டு , யாரோ பாடி, யாரோ ரெக்கார்டு பண்ணி, யாரோ லட்சக்கணக்கில முதல் போட்டு வெளியீடு பண்ணினா இவங்க, நோகாம டெடிகேட் பண்றென்னு சொல்லிட்டு போயிடுறாங்க.
அதகூட ஏத்துக்கலாம். ஆனா, சீனா தானா பாட்டை யாராவது, அம்மா அப்பாக்கு, பொண்டாட்டி பிள்ளைங்களுக்கு டெடிகேட் பண்ணுவாங்களா...

இந்த பாடலை கேட்ட நேயர், டெடிகேஷன்னா என்ன என்று தெரியாமல் கூட அதை அப்படி சொல்லியிருககலாம். ஆனால் அதை திருத்த வேண்டியது வ/வ க்களின் கடமையும்க்கூட தானே...

ஒரு நாளில், 10 மணிநேரம் F.M ஓடுகிறது என வைத்துக்கொண்டால், அதில் எட்டு மணி நேரம் யாராவது யாருடனாவது பேசிக்கொண்டிருக்கிறார்கள். அதை கொஞ்சம் பயனுள்ளதாக பேசிக்கழித்தால் நன்றாக இருக்குமே.

ஆனால் அதே நேரத்தில், ஒரு நேயர் இதேபோல பேசிவிட்டு, கடைசியில் எனக்கு "தெற்கு தெரு மச்சான்" படத்துல் இருந்து "லொக்கு லொக்கு லொக்கு இருமலு..." பாட்டை போடுங்கனு கேட்டார். அதே மாதிரி அவரோட ஃப்ரண்ட் ஒருத்தரோட பெயரை சொல்லி அவருக்கு டெடிகேட் பண்றேன்னு சொன்னார். காரணம் கேட்டதுக்கு, "இல்லீங்க, அவன் ரொம்ப சிகரெட் குடிப்பான் அதுக்காகத்தான்" அப்படினு சொன்னார். அடடா, இதுவல்லவோ நல்ல டெடிகேசனுக்கு அழகு என்று தோன்றியது.

மற்றுமொரு நேயர், "எம். குமரன்" படத்துல இருந்து, "நீயே, நீயே" சாங் போடுங்க, எங்க அம்மாவுக்கு இன்னைக்கு பிறந்த நாள் அதனால அவங்களுக்கு இந்த பாட்டை டெடிகேட் பண்றேன்னு சொன்னார். அதுவும் நன்றாகத்தான் இருந்தது.

சரி அது இருக்கட்டும், இதே வரிசையில், காதல் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளும் வருகிறது. அதற்கு நிறைய பேர் கடிதம் மற்றும் ஃபோன் மூலமாக அமோக ஆதரவு தெரிவிக்கின்றனர். சரி கடிதம் எழுதுவதோடு நிறுத்திக்கொள்ளாமல் அதில் கவிதையையும் சந்தடி சாக்கில் எழுதி அனுப்பி வைக்கிறார்கள். அவ்வாறு சமீபத்தில் நான் கேட்டு ரசித்த(!!!!) கவிதைகளில் ஒன்று.

"பூமி சூரியனை சுற்றுவது இயற்கை விதி,
நான் உன்னை சுற்றுவது எனது விதி,
நம் இருவரையும் உன் அண்ணன் சுற்றுவது எவனோ செய்த சதி"

இந்த கவிதையை வாசித்துவிட்டு, வ/வ சொன்ன அடுத்த வரி இதுதான் - "இந்த அழகான கவிதை எழுதிய அனுப்பிய (அனுப்பியவரின் பெயரை சொல்லி) என்பவருக்காக அடுத்த பாடல் வந்துகொண்டிருக்கிறது. "

0 Comments:

Post a Comment

<< Home